இடுகைகள்

திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம் சில வார்த்தைகளோ , சொற்றொடரோ பெரும்பாலான மக்க ள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள் . தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள் . அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும் . அது போன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான் . எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல , வரலாற்றில் சில முடிச்சுகள் , உண்மையைத் திரித்து , மறைத்து விடுவதுண்டு . இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும் . அதை சற்று விரிவாகப் பார்க்கலாம் . வரைபடத்தில் இல்லாத அத்திப்பட்டி   மகாபாரத காலத்தில் இந்தியா மொத்தம் 56 நாடுகளாக இருந்தது என்று சில நூல்கள் தெரிவிக்கின்றன . மகாபாரத காலம் எந்தக் காலம் என்று வியாசரைத்தான் கேட்கவேண்டும் . வட இந்தியாப் பக்கம் கேட்டால் மனித இனம் உருவாவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பே மகாபாரதம், இராமாயணம் எல்லாம் இருக்கிற தெ ன்று கூசாமல் பொய் சொல்வார்கள் . யாரா...

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அதனால் மடல் என்பதை விட கடிதம் என்ற வார்த்தையைக்  குறிப்பிட விரும்புகிறேன். இது தாய்த்தமிழை நேசிப்பவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல என்பதையும் பதிவு செய்கிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் யாரும் தமிழன் கட்டிய கோயிலில், தமிழில் வழிபாடு செய்ய வேண்டுமென்று ஒருபோதும் ஆசைப்பட்டு விடாதீர்கள்; இறந்து போனவரின் உடலை கோயில் அருகில் கொண்டு செல்வதை பெரும் குற்றம் என்று கருதும் நீங்கள், இறந்து பல நூற்றாண்டுகள் ஆகியும் கோயிலின் கருவறைக்குள் குடிகொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை குழிதோண்டிப் புதைத்த பாவத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். மேலும் அங்கு கருவறைக்குள் உல்லாசமாக இருக்கும் பல தேவநாதன்களின் சாபம் வேறு வந்து சேரும். போதாக்குறைக்கு தமிழ் வேறு வளரத்தொடங்கி விடும். அந்த பாவத்தையெல்லாம் தயவுசெய்து நீங்கள் சம்பா...

தமிழர்களின் அடிமை வாழ்வு - பாகம் 2

முதல் பாகத்தின் தொடர்ச்சி தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1200 ஆண்டு வரலாற்றை சில பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற வியப்பு பலர் கண்முன்னே விரிந்து நிற்குமென்று நம்புகிறேன். ஆனால் தமிழர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்ட சில நிகழ்வுகளை மட்டும்தான் ஆராய இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பதிவு செய்வது மட்டும் வரலாறல்ல, அந்த நிகழ்வால் ஒரு சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன என்று அலசுவதுதான் வரலாறு என்பது எனது பார்வை. அந்த வரலாற்று சிந்தனையோடு கட்டுரைக்குள் நுழைவோம். இனப்படுகொலை ஆரியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற அந்நியர்கள் தமிழகத்தில் ஊடுருவி ஆட்சி செய்தார்கள் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். அவர்கள் நுழைவுக்குப் பின்னும் தமிழர்களின் அறிவாற்றலும், போர்க்குணமும் கொஞ்சமும் குறையவில்லை....

ஏன் கடவுள்?

பெரியாரை விமர்சிப்போம்  கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை!  கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் ! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, பெரியாரைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு பெரியார் மீது நிறைய நன்மதிப்பும்  உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், பெரியாரை விமர்சனம் செய்தால் மட்டும் கொந்தளிக்கிற முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை. நான் எழுத வேண்டிய தலைப்புக்கும் பெரியாருக்கும் பெரிய தொடர்பில்லை என்றாலும், கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று மிகக்கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிற பெரியாரைத் தொட்டுவிட்டு கட்டுரைக்குள் நுழைவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், கடவுளைப் படைத்தவன் முட்டா...

வாக்குத் தவறானால்?

படம்
தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது? தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும் தீயில் அமர்ந்திருந்தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். ஆரியர்களைக் கதறவிட்ட நெடுஞ்செழியனுக்கும் மனைவியென்றால் உதறலெடுக்கும் போலும். காணாமல் போன கால்சிலம்பை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது, கோப்பெருந்தேவிக்கு ஏற்கனவே கிடப்பில் கிடக்கும் கோபம். அந்த நாட்டுக்கே அவன் அரசனென்றாலும், அந்தப்புரத்தில் புருசன் என்ற பதவி மட்டுமே செல்லுபடியாகுமா? இதில் அரசனுக்குக்கூட விதிவிலக்கு இல்லையா? நாட்டிய மங்கைகளும், நாடாளும் நங்கையும் அவன் மனதை சற்றுத் தடுமாறச் செய...

உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

படம்
மிருகம் பாதி மனிதன் பாதி அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன்? அந்த விலங்குக்கு ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த மனித இனம்தான் அது. காடு அவர்களை மிரட்டியது. எதிர்த்து சண்டையிட்டு வெல்ல முடியாத அளவுக்கு ஆற்றல் வாய்ந்த விலங்குகள் வாழும் இடமது. இரண்டு ஓநாய் ஒன்று சேர்ந்தாலே உயிருக்கு உத்திரவாதமில்லை என்பதுதான் கள யதார்த்தம். பராசக்தி படத்தில் வரும் சிவாஜியின் தங்கை போல ஓடினான், ஓடினான், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான். பாதி குரங்கையும், பாதி மனிதனையும் தனது உடம்பில் சுமந்து கொண்டிருந்த நமது முன்னோர்களுக்கு அவ்வளவு அச்சுறுத்தல்கள் காத்திருந்தன அந்த அடர்ந்த வனத்த...

தமிழர்களின் ஒற்றுமை

படம்
ஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள்  தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில்,  எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும். அந்த ஒற்றைப் புள்ளியை  மையமிட்டுதான் இந்த கட்டுரை நகரப்போகிறது.  கட்டுரையில் குறிப்பிடப்படும் இரண்டு வரலாற்று சம்பவங்களில் ஒன்று ஒட்டுமொத்தத் தமிழகத்தையே ஒன்றிணைத்த வரலாறு. இன்னொன்று, தமிழகத்தின் ஒரு சிறு பகுதியை சில நாட்கள் மட்டும் ஒற்றுமையாக இருக்கச் செய்த வரலாறு. முதல் சம்பவம் சங்க காலத்தில் நடந்த மௌரியப் படையெடுப்பு, மற்றொன்று முதல் உலகப்போரின்போது ஒரு கப்பல் குண்டு வீசிய சம்பவம். அந்த இரண்டு சம்பவங்களின்போது நடந்தது என்ன, காண்போம். மௌரியப் படையெடுப்பு  மகத நா...

சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்

நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில் பின்பற்றப்படும் வழக்கம். தூத்துக்குடி பக்கம், பொதுவாக, நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாம் பெண் வீட்டில் நடப்பது மரபு. பெண்வீட்டில் நிச்சயதார்த்த நாள் அன்று, "மரகதவல்லிக்கு மணக்கோலம், என் மங்கலச்செல்விக்கு மலர்க்கோலம்" என்ற பாடல் ஒலிக்கும். "அன்புள்ள அப்பா" என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். அந்தப் பாடலைக் கேட்டாலே, பெண்ணின் தந்தைக்கு கண்ணீர் வந்து விடும், அவ்வளவு உருக்கமான பாடல் அது. திருமணத்தில் மணமகளை மேடைக்கு அழைத்து வரும்போது "வாராய் என் தோழி...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - மூன்று

படம்
மூன்றாம் இடம் நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று  இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம். தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது தமிழர்களின் உலகம் தழுவிய பரந்த பார்வையைக் காட்டுகிறது. நாமும், மூன்று குறித்தத் தகவல்களைத் திரட்டும்போது, உலகை முன்னிறுத்தித்  துவங்குவது சிறப்பு. அந்த சிறப்புடன் மூன்று தொடர்பான தகவல்களுக்குள் நுழைவோம்.  மூன்று - ௩   தமிழ் எண் மூன்று, கிட்டத்தட்ட உயிர் மெய்யெழுத்து "ங" போல இருக்கும். கடைசியில் வரும் மேல்நோக்கிய கோட்டை நீக்கி விட்டால் அதுதான் எண் மூன்றின் குறியீடு "௩".  "ங" மற்றும் பிற மெல்லின எழுத்துக்கள் மூக்கின் உதவியால் உச்சரிக்கப்படுவதால் மூக்கொலிகள் என்று அழைக்க...