திராவிடம் - நறுக்குவோம் பகையின் வேர்

திராவிடம் என்பது தமிழ்நாட்டைத் தமிழரல்லாதவர்கள் ஆளவும் கொள்ளையடிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சதிகாரக் கூட்டமைப்பு. பல தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட தலைவர்களும் திராவிடத்தோடு உறவாடியிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் கருவி என்பதை உணர்ந்து கொண்டனர். திராவிடம் பற்றி சில தலைவர்கள் சொன்ன கருத்துக்களைக் காண்போம். அயோத்திதாசப் பண்டிதர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தந்தை சி.பா. ஆதித்தனார், ஒரிசா பாலசுப்ரமணியம், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் திராவிடம் பற்றி சொன்ன கருத்துக்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. திராவிடத்தில் பயணிப்பவர்களே திராவிடத்தின் உண்மை முகம் அறிந்தவர்கள்தான் என்பதே உண்மை. திராவிடம் பற்றி சுப.வீரபாண்டியன், திருமா போன்றவர் என்ன சொல்லியிருக்கின்றனர் என்பதையும் காண்போம்.

கருத்துகள்