தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்

ஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. "மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக" என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 - 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு கெட்டி. 7 முறை மின்னல் தாக்கியும் மனிதர் பிழைத்துக் கொண்டார். அவர் யாரிடமாவது, வாருங்கள் கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று அழைத்தால், அனைவரும் பின்னங்கால் பிடரி தட்ட ஓடினார்கள். மின்னல் தாக்கி விடுமோ என்கிற பயம்தான். பொதுவாக நமக்கு விக்கல் வந்தால் 5 முதல் 10 வினாடிகள் வரை இருக்கும். அதிகம் போனால் அரைமணி நேரம். சார்லஸ் ஆஸ்பார்ன் (Charles Osborne) (கி.பி. 1894 - 1991) என்ற மனிதருக்கு விக்கல் வந்தது. எத்தனை மணிநேரம் என்று கேட்டால் தவறு. 1922ம் ஆண்டிலிருந்து 1990ம் ...