இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்

படம்
ஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. "மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக" என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல்.   மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 - 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு கெட்டி. 7 முறை மின்னல் தாக்கியும் மனிதர் பிழைத்துக் கொண்டார். அவர் யாரிடமாவது, வாருங்கள் கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று அழைத்தால், அனைவரும் பின்னங்கால் பிடரி தட்ட ஓடினார்கள். மின்னல் தாக்கி விடுமோ என்கிற பயம்தான்.   பொதுவாக நமக்கு விக்கல் வந்தால் 5 முதல் 10 வினாடிகள் வரை இருக்கும். அதிகம் போனால் அரைமணி நேரம். சார்லஸ் ஆஸ்பார்ன் (Charles Osborne) (கி.பி. 1894 - 1991) என்ற மனிதருக்கு விக்கல் வந்தது. எத்தனை மணிநேரம் என்று கேட்டால் தவறு. 1922ம் ஆண்டிலிருந்து 1990ம் ...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - இரண்டு

படம்
இரண்டாம் இடம்  படிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப்  பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ, கலந்து கொண்ட அனைவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இரண்டு என்ற எண் மற்றும் வார்த்தை தொடர்பான தகவல்களுக்குள் நாம் நுழைவோம்.      இரண்டு - வேர்ச்சொல் இரண்டு என்ற சொல்லின் வேர்ச்சொல் ஈர் என்ற வார்த்தை. ஈர் என்ற வார்த்தைக்குப் பின்னால் பிறப்பின் பொருளே அடங்கியிருக்கிறதென்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். ஈர்தல் என்றால் இரண்டாதல் என்று பொருள். ஈர்தல் என்ற வார்த்தையில் இருந்துதான் ஈனுதல் என்ற வார்த்தை பிறந்தது. ஈனுதல் என்றால் குழந...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - நான்கு

நான்கு  நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர் போலிருக்கிறது என்று நினைத்து ஆச்சர்யப்படலாம். எவ்வளவோ எண்கள் இருந்தும், ஏன் நாலும் தெரிந்தவரா என்று கேட்கிறார்கள்? இந்த கேள்விக்கு, நான்கு தொடர்பான தகவல்களைத் திரட்டும்போது மனதில் தோன்றிய பதிலை சொல்கிறேன். அந்த பதில் சரிதானா என்ற முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  நாலும் தெரிந்தவரா என்ற கேள்வியில் நாலு என்பது நான்கு திசைகளைக் குறிப்பதாக இருக்கலாம். நான்கு திசைகளிலும் நடக்கும் அனைத்தையுமே அறிந்தவரா நீங்கள்? என்ற விதத்தில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம். சுருக்கமாக சொன்னால், உலக நடப்புகள் அனைத்தையும் அறிந்தவரா? என்று கேட்பதாக பொருள் கொள்ளலாம். இணையத்தில் தேடுகையில், நாலும் தெரிந்தவரா என்றால், அறம், பொருள், காமம், வீடு என்ற நான்மறைகளையும் உணர்ந்தவரா என்று கேட்பதுபோல பொருள்படும் என்ற பதிலும் கிடைத்தது. அதுவும் நல்ல பதிலாகவே தோன்றுகிறது. ஒரு கேள்விக்...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - ஒன்று

எண்ணும் எழுத்தும் எண்ணித் துணிக என்று வள்ளுவர் எண்ணத்தைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். எண்ணத்துக்கும், எண்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால், கிராமத்துப் பக்கம், எத்தனைப் பொருட்கள் இருக்கின்றன என்பதை, எத்தனை எண்ணம் இருக்கிறதென்று கேட்பார்கள். நம் மனதில் உதிக்கும் எண்ணமே ஒரு கணக்குதானோ என்று தோன்றுகிறது. தமிழைப் பொதுவாக தமிழ் நெடுங்கணக்கு என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, மனதில் உதிக்கும் எண்ணம் என்ற வார்த்தைக்கும் கணித எண்ணுக்கும் இடையே இவ்வளவு வார்த்தை ஒற்றுமை. நாம் எண்களைப் பற்றியும், அது தொடர்பான வார்த்தைகளைப் பற்றியும், அவற்றுள் ஒளிந்துகிடக்கும் தகவல்களையும் கண்டறிய விழைகிறோம். தகவல்களைக் கண்டறியும் முன் 2 திருக்குறளைப் படித்துவிட்டுத் துவங்கலாம். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் முதல் குறள், நாம் அனைவரும் அறிந்தது. எண்ணையும், எழுத்தையும், இரண்டு கண்களுக்கு இணையாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். எண்ணை முதலில் குறிப்பிடுவதில் இருந்து அதன் முதன்ம...