தனையனுடன் பிறந்த தந்தை
உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் - ஆனால்
உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம்.
பாசத்திற்கு நான் பழையவன் - அதை
வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன்.
கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை - ஆனால்
நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை.
இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு - அதற்குள்
உருக்கமான உள்ளமும் உண்டு.
உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை - ஏனோ
உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை.
பிறந்து விட்டாய் நீ என்றதும் - ஒரு நொடி
மறந்து விட்டேன் இந்த உலகை.
அன்று பிறந்தது நீ மட்டுமல்ல - உன்னுடன்
உனக்கொரு தந்தையும் பிறந்திருக்கிறான்.
உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம்.
பாசத்திற்கு நான் பழையவன் - அதை
வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன்.
கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை - ஆனால்
நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை.
இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு - அதற்குள்
உருக்கமான உள்ளமும் உண்டு.
உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை - ஏனோ
உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை.
பிறந்து விட்டாய் நீ என்றதும் - ஒரு நொடி
மறந்து விட்டேன் இந்த உலகை.
அன்று பிறந்தது நீ மட்டுமல்ல - உன்னுடன்
உனக்கொரு தந்தையும் பிறந்திருக்கிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக