தனையனுடன் பிறந்த தந்தை

உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் - ஆனால்
உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம்.

பாசத்திற்கு நான் பழையவன் - அதை
வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன்.

கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை - ஆனால்
நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை.

இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு - அதற்குள்
உருக்கமான உள்ளமும் உண்டு.

உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை - ஏனோ
உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை.

பிறந்து விட்டாய் நீ என்றதும் - ஒரு நொடி
மறந்து விட்டேன் இந்த உலகை.

அன்று பிறந்தது நீ மட்டுமல்ல - உன்னுடன்
உனக்கொரு தந்தையும் பிறந்திருக்கிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொல்காப்பியத்தில் அறிவியல்

பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்

முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு