இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூங்காச் செடிகள்

அளந்து வைத்த உயரம்... ஆர்ப்பரிக்கும் அழகு... திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்... இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்.. கண்ணைப் பறிக்கும் கைப்பேசி... உள்ளம் கவரும் உடைகள்.. எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு... நுனிநாக்கு ஆங்கிலம்.. இவர் மென்பொருள் பொறியாளர்... பூங்காச்செடிகளும் மென்பொருள் பொறியாளனும் ஒருவகையில் ஒன்றுதான். இரண்டு பேரும் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

நீர் மூலம்  ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம்.  நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீரில் 96.5 % கடல் நீர்தான். அது நமக்கு குடிக்க உதவாது. இன்னும் 1% அமில நீர். அதையும் நாம் பயன்படுத்த முடியாது. இந்த புள்ளிவிபரத்தைக் கேட்டதும் பாதிபேருக்கு புரையேறியிருக்கும். இன்னும் கேட்டால் சற்று மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை. கடல்தண்ணீர் போக மீதியிருக்கும் 2.5% தான் நாம் பயன்பாட்டுக்குத் தகுந்த நல்ல நீர். இப்போது நாம் நல்ல நீரை மட்டும் கணக்கில் கொள்வோம். 100% நல்ல நீரில் 69% அண்டார்டிகா போன்ற பகுதிகளில் உறைந்து கிடக்கிறது, 30% நிலத்தடியில் இருக்கிறது, 1% தான்...

தனையனுடன் பிறந்த தந்தை

உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் - ஆனால் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம். பாசத்திற்கு நான் பழையவன் - அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன். கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை - ஆனால் நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை. இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு - அதற்குள் உருக்கமான உள்ளமும் உண்டு. உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை - ஏனோ உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை. பிறந்து விட்டாய் நீ என்றதும் - ஒரு நொடி மறந்து விட்டேன் இந்த உலகை. அன்று பிறந்தது நீ மட்டுமல்ல - உன்னுடன் உனக்கொரு தந்தையும் பிறந்திருக்கிறான்.