இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்களின் அடிமை வாழ்வு - பாகம் 2

முதல் பாகத்தின் தொடர்ச்சி தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1200 ஆண்டு வரலாற்றை சில பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற வியப்பு பலர் கண்முன்னே விரிந்து நிற்குமென்று நம்புகிறேன். ஆனால் தமிழர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்ட சில நிகழ்வுகளை மட்டும்தான் ஆராய இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பதிவு செய்வது மட்டும் வரலாறல்ல, அந்த நிகழ்வால் ஒரு சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன என்று அலசுவதுதான் வரலாறு என்பது எனது பார்வை. அந்த வரலாற்று சிந்தனையோடு கட்டுரைக்குள் நுழைவோம். இனப்படுகொலை ஆரியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற அந்நியர்கள் தமிழகத்தில் ஊடுருவி ஆட்சி செய்தார்கள் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். அவர்கள் நுழைவுக்குப் பின்னும் தமிழர்களின் அறிவாற்றலும், போர்க்குணமும் கொஞ்சமும் குறையவில்லை....