ஏன் கடவுள்?
பெரியாரை விமர்சிப்போம் கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் ! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, பெரியாரைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு பெரியார் மீது நிறைய நன்மதிப்பும் உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், பெரியாரை விமர்சனம் செய்தால் மட்டும் கொந்தளிக்கிற முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை. நான் எழுத வேண்டிய தலைப்புக்கும் பெரியாருக்கும் பெரிய தொடர்பில்லை என்றாலும், கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று மிகக்கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிற பெரியாரைத் தொட்டுவிட்டு கட்டுரைக்குள் நுழைவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், கடவுளைப் படைத்தவன் முட்டா...