உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

மிருகம் பாதி மனிதன் பாதி அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன்? அந்த விலங்குக்கு ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த மனித இனம்தான் அது. காடு அவர்களை மிரட்டியது. எதிர்த்து சண்டையிட்டு வெல்ல முடியாத அளவுக்கு ஆற்றல் வாய்ந்த விலங்குகள் வாழும் இடமது. இரண்டு ஓநாய் ஒன்று சேர்ந்தாலே உயிருக்கு உத்திரவாதமில்லை என்பதுதான் கள யதார்த்தம். பராசக்தி படத்தில் வரும் சிவாஜியின் தங்கை போல ஓடினான், ஓடினான், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான். பாதி குரங்கையும், பாதி மனிதனையும் தனது உடம்பில் சுமந்து கொண்டிருந்த நமது முன்னோர்களுக்கு அவ்வளவு அச்சுறுத்தல்கள் காத்திருந்தன அந்த அடர்ந்த வனத்த...