இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்களின் ஒற்றுமை

படம்
ஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள்  தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில்,  எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும். அந்த ஒற்றைப் புள்ளியை  மையமிட்டுதான் இந்த கட்டுரை நகரப்போகிறது.  கட்டுரையில் குறிப்பிடப்படும் இரண்டு வரலாற்று சம்பவங்களில் ஒன்று ஒட்டுமொத்தத் தமிழகத்தையே ஒன்றிணைத்த வரலாறு. இன்னொன்று, தமிழகத்தின் ஒரு சிறு பகுதியை சில நாட்கள் மட்டும் ஒற்றுமையாக இருக்கச் செய்த வரலாறு. முதல் சம்பவம் சங்க காலத்தில் நடந்த மௌரியப் படையெடுப்பு, மற்றொன்று முதல் உலகப்போரின்போது ஒரு கப்பல் குண்டு வீசிய சம்பவம். அந்த இரண்டு சம்பவங்களின்போது நடந்தது என்ன, காண்போம். மௌரியப் படையெடுப்பு  மகத நா...