பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்
அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. "அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்" என்று ஒரு இழிவான தகவலைப் பழமொழிகள் நமக்கு ஒருபோதும் தராது. ஆகையால், பழமொழியைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இங்கு அரசன் என்பது அரசமரத்தை மட்டுமே குறிக்கும். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். இது பழமொழி என்று சொல்வதை விட ஒரு விடுகதை என்று சொல்லலாம். மழை பெய்து ஒரே நாள் இரவில், பல இடங்களில் காளான்கள் முளைத்திருக்கும். "நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்" என்ற சொல்லாடலைக் கேட்டிருப்போம். ஒருநாள் மழையில் முளைத்த காளான், சீக்கிரம் அழிந்தும் போகும், அதனால்தான் அற்பன் என்...