தமிழர்களின் அடிமை வரலாறு - பாகம் 1
வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில் கற்களைப் பிடித்தபோது, கையில் எழுத்தாணி பிடித்த தமிழினம், இன்று தாய்மொழிப் பற்றின்றி, வரலாற்றின் மீது அக்கறையின்றி, அடிமை சமூகம் போல மாறிப்போனது ஏன்? மூன்றுவேளை சோற்றுக்காக, முன்னோர்களின் பெருமைகளை அடகுவைத்தது ஏன்? குறுகிப்போன மலை உச்சியின் அடிவாரம் அகன்றிருப்பது போன்று, சுருங்கிப்போன தமிழினத்துக்கும் பரந்துபட்ட வரலாறு உண்டு. அந்த அகன்ற வரலாற்றின் பக்கங்களில் எங்கோ சில இடுக்குகளில் விதைக்கப்பட்ட அடிமைத்தனத்தின் விதைகளைத் தேடும் முயற்சிதான் இந்தக் ...