இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்களின் அடிமை வரலாறு - பாகம் 1

வரலாறு  தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக்  கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில் கற்களைப் பிடித்தபோது, கையில் எழுத்தாணி பிடித்த தமிழினம், இன்று தாய்மொழிப் பற்றின்றி, வரலாற்றின் மீது அக்கறையின்றி, அடிமை சமூகம் போல மாறிப்போனது ஏன்? மூன்றுவேளை சோற்றுக்காக, முன்னோர்களின் பெருமைகளை அடகுவைத்தது ஏன்? குறுகிப்போன மலை உச்சியின் அடிவாரம் அகன்றிருப்பது போன்று, சுருங்கிப்போன தமிழினத்துக்கும் பரந்துபட்ட வரலாறு உண்டு. அந்த அகன்ற வரலாற்றின் பக்கங்களில் எங்கோ சில இடுக்குகளில் விதைக்கப்பட்ட அடிமைத்தனத்தின் விதைகளைத் தேடும் முயற்சிதான் இந்தக் ...

பட்டாம்பூச்சியில் ஏன் பாகுபாடு

ஆண்குழந்தைகள் விதிவிலக்கல்ல  நம் சமூகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு சமூகக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அது கட்டாயத் தேவையும் கூட. உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் கூட பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது அருவெறுப்பான உண்மை. சினிமாக்களில் குத்துப்பாடல்களில் அரைகுறையாக ஆட விடுவதில் துவங்கி, விளையாட்டு மைதானங்களில்  உற்சாகமூட்டும் பெண்கள் என்று கீழ்த்தரமான ஆடைகளுடன் ஆட விடுவது  வரை பெண்களை ஒரு போதைப் பொருள்போல பயன்படுத்தும் அவலம் இன்றும் நிகழ்வது கொடுமை. பெண்களுக்கென்ன, பெண் குழந்தைகளுக்கே பாதுகாப்பற்ற சூழல்தான் நம் நாட்டில் நிலவுகிறது. இவற்றுக்கெதிராக நம் குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். குற்றவாளிகள் பாகுபாடில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களுக்கெதிரான குற்றங்களைக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி. அதே நேரம் ஆண்கள் மீதான கொடுமைகள், ஆண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், வன்புணர்வுகள் குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா என்று கேட்ட...

யார்/எது கடவுள்?

கடவுள் இல்லை யார் கடவுள்? என்ற கட்டுரையின் முதல் தலைப்பை கடவுள் இல்லை என்று தொடங்குவது சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு என்ற நிலையில் இருந்து உதிர்ந்த சொல்லன்று. நான் இந்த உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் சுட்டிக்காட்டும்  கடவுளை கடவுள் என்ற ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாகவும் நம்பவில்லை. அதனால்தான் இந்த ஏடாகூடமான தலைப்பு. அப்படியானால் யார் கடவுள்? மீண்டும் அந்த விடையறியா சரித்திரக் கேள்வி நம் மீது கணையாகப் பாய்கிறது. பொதுவாக எல்லா மதங்களும் மனிதனை கடவுள்தான் படைத்தார் என்று ஆணித்தரமாக நம்பின, டார்வின் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று நிரூபிக்கும் வரை. அப்படியானால் குரங்கைப் படைத்தது யார் என்று பின்னோக்கிப் போய்க்கொண்டே இருந்தால், முதலில் தோன்றிய கடல் பாசியில் வந்து நிற்கும். சுமார் 428 கோடி ஆண்டுகளுக்கு முன் நமது பூமியில் தோன்றிய முதல் உயிரினம் என்றால் கடல் பாசி தான். கொஞ்சம் அறிவியல் கலந்து சொல்ல வேண்டுமானால் "சயனோபாக்டீரியா (Cyanobacteria)". அதுதான் அந்த கடல் பாசியின் அறிவியல் பெயர். முதலில் தோன்றிய பாசி முதல் இன்...