இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் மறந்த முதல் மகாத்மா

படம்
துரத்தியடிக்கப்பட்ட மகாத்மா அந்த வாலிபன் தனது நண்பனின்  திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான். திருமண வீட்டு வாசலில் அவன் காலடி பட்டதுதான் தாமதம், உள்ளேயிருந்த சிலர் அவனைத்  தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் தொடுத்த முதல் கேள்வி, நீ என்ன ஜாதி. அவன் துணிவாக சொன்னான், நான் மாலி ஜாதியைச் சார்ந்தவன். மறுகணமே அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டான். அவனது நண்பன் கூட உதவி செய்ய முன்வரவில்லை. நெஞ்சம் கனத்தது. அழுவதைத் தவிர வேறு எந்தவிதப் புரட்சியும் செய்யமுடியாத நிலை. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் தந்தை இதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல் அவனை அணைத்துக் க...

பெற்றோர்களின் கவனத்திற்கு

குழந்தைகள் உலகம் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை . குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ , அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உலகம் என்பது புதிதுதான் . வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால்  வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தை எதிர்காலத்தில் சிறந்தமுறையில் நம் சமுதாயத்தை எதிர்கொள்ளும் என்று கட்டாயம் சொல்ல முடியும் . அந்த வகையில் குழந்தை வளர்ப்பு என்பதில் பெற்றோர்களுக்கான புரிதல் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது . தகுதியான பெற்றோர்கள் என்பது அடுத்தத் தலைமறையின் அவசரத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது . இன்றைய பெற்றோர்களுக்கு வேண்டிய சில தகுதிகளைக் குறித்துப் பார்க்கலாம் . மறுக்கப் பழகுங்கள்  நாம் சி...

சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்

படம்
 எழுத்துக்கள் இல்லாத மொழி "பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit). இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. மறைக்கப்படுகின்ற உண்மை என்னவென்றால் அவற்றில் 60,000 கல்வெட்டுகளுக்கும் மேற்பட்டவை தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகள். அதில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பிறமொழி கல்வெட்டுகள். மற்றவை அனைத்தும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. இந்தியாவில், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பேசப்பட்ட மொழிகள் பெருவாரியாக மூன்று, அவை தமிழ், பிராகிருதம் மற்றும் பாளி. புத்தர் பேசியது பாளி மொழிதான். அகழ்வாராய...