இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொல்காப்பியத்தில் அறிவியல்

இலக்கணத்தையும் தாண்டி தொல்காப்பியம் இலக்கண நூல் என்பது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. இலக்கணம் என்பதையும் தாண்டி வாழ்வியல், அறிவியல் போன்ற பல சமூக விதிகளைத் தொட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. தொல்காப்பியம் காட்டும் அறிவியல் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். அறிவியலுக்குள் நுழையும் முன்பு தொல்காப்பியம் குறித்து ஒரு சிறு முன்னுரை மட்டும். போரடிக்கும் முன் நிறுத்தி விடலாம். கவலை வேண்டாம். சுருக்கமாக விறு விறு தொல்காப்பியம் தொல்காப்பியம் மொத்தம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அதிகாரம் என்றால் சர்வாதிகாரம் போல ஆட்டிப்படைப்பது போன்ற பொருள் அல்ல. அதிகாரம் என்றால் ஒரு நூலில் உட்பிரிவு. அவ்வளவுதான். எழுத்ததிகாரம்  சொல்லதிகாரம் பொருளதிகாரம் இவைதான் அந்த மூன்று அதிகாரங்கள். அதிகாரங்கள் மேலும் பல கூறுகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது. இயல்களுக்குள் இன்னும் உட்பிரிவுகள் உண்டு. அதைப் பிறிதொரு தருணத்தில் பார்க்கலாம். தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் பனம்பரனார். பாயிரம் என்றால் முன்னுரை, முகவுரை போல அந்த நூலுக்கு ஒரு அறிமுக உரை. பொதுவாக...

Corporate தாய்

ஆயா முகத்தில் நீ கண்விழிக்க... அலுவலக வாசலில் நான் இருப்பேன்... தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்... தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்.... உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்... உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்... தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு... தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு... தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை... முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை... வீட்டுச்சுமை வேலைக்கு தள்ளியது என்னை... வீட்டுக்குள்ளே அந்நியமாக்கியது உன்னை... கருவில் சுமந்த உன்னை கையில் சுமக்க நேரமில்லை... உயிரில் கலந்த உன்னை உச்சிமுகர காலமில்லை... அலுவலகத்தில் இருந்தாலும் ஆசை நெஞ்சம் உன்னுடன்தான்... கணினி முகம் பார்த்தாலும் என் கண் முழுதும் உன் உருதான்... என் கண்ணீருக்குள் கலையாத காவியம் நீ... என் உயிருக்குள் கலந்த இன்னொரு உயிர் நீ... நம் கடன்தீரும் நாள் ஒருநாள் வரும்... உனைக் கட்டியணைத்துக் கொஞ்சும் நாளும் வரும்... காத்திரு மகளே... இந்த Corporate ...

தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி

படம்
உருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின்  சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால் நாம் குறைந்தது 10 முதல் 20 கோடி வருடங்களாவது பின்னோக்கிப் போக வேண்டியிருக்கும்.  10 முதல் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் நாம் வாழும் இந்த பூமி, இன்று இருப்பது போன்று பிய்த்துப்போட்ட தூத்துக்குடி பரோட்டா போல  தனித்தனியாக இல்லை. உருட்டி வைத்த மைதா மாவு போல ஒன்றாக இருந்தது. அதற்கு பாஞ்சியா, கோண்டுவானா என்று காலத்துக்கு தகுந்தாற்போல, வாய்க்குள் நுழையாத, நூடுல்ஸ் போல பல சிக்கலான பெயர்கள் உண்டு. நம் கண்களுக்கு அப்போது இந்தியா தனியாகத் தெரியாது. அப்படியானால் இலங்கை கட்டாயம் தெரிய வ...