திராவிடம் என்னும் சங்கேதம்
சங்கேதம் சில வார்த்தைகளோ , சொற்றொடரோ பெரும்பாலான மக்க ள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள் . தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள் . அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும் . அது போன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான் . எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல , வரலாற்றில் சில முடிச்சுகள் , உண்மையைத் திரித்து , மறைத்து விடுவதுண்டு . இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும் . அதை சற்று விரிவாகப் பார்க்கலாம் . வரைபடத்தில் இல்லாத அத்திப்பட்டி மகாபாரத காலத்தில் இந்தியா மொத்தம் 56 நாடுகளாக இருந்தது என்று சில நூல்கள் தெரிவிக்கின்றன . மகாபாரத காலம் எந்தக் காலம் என்று வியாசரைத்தான் கேட்கவேண்டும் . வட இந்தியாப் பக்கம் கேட்டால் மனித இனம் உருவாவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பே மகாபாரதம், இராமாயணம் எல்லாம் இருக்கிற தெ ன்று கூசாமல் பொய் சொல்வார்கள் . யாரா...